இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்றாரா அமித் ஷா?
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா வேலூர் இப்ராஹிம்?
மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்றாரா வன்னி அரசு?
நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அரபு மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்து வெளியிட்டதா சவுதி அரசு?
அரபு மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது சவுதி அரேபிய அரசு என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அது தவறானதாகும்.

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ‘மத்திய அரசு’ என்று நிதி பெறுவதற்காக குறிப்பிட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்று குறிப்பிடாமல் மத்திய அரசு என்று நிதிக்காக குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)