திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்றாரா ஜெயக்குமார்?

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்றாரா ஜெயக்குமார்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் –  ஜெயக்குமார்

Fact: அதிமுக தரப்பு இத்தகவலை மறுத்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி 100 நாள் பாதயாத்திரை செல்லவிருக்கின்றார். இந்த யாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், “கூட்டம் சேர்க்க மட்டும் கூட்டணி தயவு தேவைப்படுகிறதா? அண்ணாமலை மட்டும் தனியாக நடக்கட்டும். அதிமுக இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்.
Screenshot from Twitter@Kisha1625

Twitter Link | Archived Link

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்.
Screenshot from Twitter@Dravidan_Kabali

Archived Link

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்.
Screenshot from Twitter@dravidam_100

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் வன்கொடுமையில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று பரவும் புகைப்படத் தகவல் உண்மையா?

Fact Check/Verification

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

அதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம்.

அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயக்குமார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK

Phone Conversation with Vinothkumar, Thanthi TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular