வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact CheckFactcheck: பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி செய்தி...

Factcheck: பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim : பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டது
Fact: வலைப் பயிற்சின்போது தோனி சிக்ஸர்களை விளாசியதாகவே தந்தி டிவி செய்தி வெளியிட்டது

நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் நேற்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு பந்தில் ஒன் ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், “சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் தோனி – அதிரடியால் அதிர்ந்த மைதானம்” என்று தலைப்பிட்டு தந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இச்செய்தியை கண்ட இணையவாசிகள் தந்தி தொலைக்காட்சியை விமர்சித்து வருகின்றனர்.

பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டது
Screengrab from Facebook/OfflTrollMafia
பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டது
Screengrab from Facebook/sekaran.sekaran.7923030
பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டது
Screengrab from Facebook/Rajinikanth360

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: FactCheck: சுவாமி விவேகானந்தரின் அரிதான வீடியோ என்று பரவும் வீடியோ உண்மையானதா?

Factcheck / Verification

பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இவ்வாறு ஒரு செய்தி பரவுவதற்கு ஆதாரமாக விளங்கிய தந்தி டிவியின் டிவீட்டை ஆராய்ந்தோம்.

இதில் பெங்களூர் – சென்னைக்கு போட்டிக்கு முன்பு நடந்த வலைப் பயிற்சியின்போது தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

நேற்றைய போட்டிக்கு முன் வலை பயற்சியின்போது தோனி சிக்ஸர்களை விளாசிய வீடியோவானது இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.  

இதை அடிப்படையாக வைத்தே தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்தது. தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அதை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் காண்கையில் வலை பயிற்சியின்போது தோனி அடித்த சிக்ஸர்கள் குறித்து தந்தி டிவி வெளியிட்ட செய்தியானது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

Also Read: சிஎஸ்கே சிவம் துபே சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று 2022ஆம் ஆண்டு புகைப்படம் பகிர்ந்த News 18 தமிழ்நாடு!

Conclusion

பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from Thanthi Tv, Dated on April 17, 2023
Tweet from @IPL, Dated on April 17, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular