ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியது சரி என்றாரா அண்ணாமலை?

பட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியது சரி என்றாரா அண்ணாமலை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி  மணியன் பேசிய கருத்தில் உடன்படுகிறேன் -அண்ணாமலை 

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதில் நான் உடன்படுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.

”உண்மையாவா டா அண்ணாமலை ? Really ? அண்ணல் அம்பேத்கர் வெறும் டீ வாங்கி வரும் clerk போல தான் அங்கு செயல்பட்டார் என்று சொன்ன அந்த கருத்துக்கு நீ உடன்படுறியா ? . இது தான்டா #சனாதனம் என்னும் கொடிய விஷம்.” என்கிற பதிவுடன் இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

Screenshot from X @ArasiyalKadai

Archived Link

Screenshot from Facebook/ashok

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

பட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசிய கருத்தில் உடன்படுகிறேன் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் ABP Nadu வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், அப்படி எந்த நியூஸ்கார்டும் வெளியாகியிருக்கவில்லை.

“அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைப்பது போன்ற கருத்து தவறு; அது ஏற்புடையதல்ல – அண்ணாமலை” என்கிற நியூஸ்கார்டே அண்ணாமலை குறித்து நேற்று வெளியாகியிருந்தது.  

எனவே, ABP Nadu துணை ஆசிரியரான ராஜா சண்முகசுந்தரத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

மேலும், ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது குறித்த செய்தி மட்டுமே அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது.

எனவே, வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது உறுதியாகிறது.

Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்றாரா அண்ணாமலை?

Conclusion

பட்டியலினத்தவர் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசிய கருத்தில் உடன்படுகிறேன் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With Raja Shanmugasundaram, ABP Nadu, Dated September 14, 2023
Facebook Post From, ABP Nadu, Dated September 14, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular