சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஅயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் – நிர்மலா சீதாராமன்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

“அயோத்தியில் ஸ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டி முடித்ததும் தக்காளி உட்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் “என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாரமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@Vinosh_Pinku

Twitter Link | Archived Link

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாரமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/premier.thirupathy

Archive Link

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாரமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Sundarraj Vennila

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தாரா ஈபிஎஸ்?

Fact Check/Verification

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக நிதியமைச்சர் வைரலாகும் இத்தகவலை தெரிவித்துள்ளாரா என அறிய அவரது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் ஆராய்ந்தோம். இதில் அவர் இக்கருத்தை கூறியதாக எந்த ஒரு செய்தியோ, பதிவோ நமக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளரான வினோத்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் இந்த நியூஸ்கார்டு போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என உறுதி செய்தார்.

இதனையடுத்து பாஜக சமூக ஊடக அணித் தலைவர் எம்.எஸ்.பாலாஜியும்  இந்த தகவல் பொய்யானது என்று தெளிவு செய்தார்.

Also Read: லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Vinoth Kumar, Thanthi TV

Phone Conversation with M.S.Balaji, IT Wing Head, Tamilnadu BJP


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular