சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkபாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பாரத் ஜோடோ யாத்திரைக்கு நடுவே காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி, சிக்கனுடன் மது அருந்தியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாரத் ஜோடோ, அதாவது இந்திய ஒற்றுமைப்பயணம் என்பதாக 100 நாட்கள் யாத்திரை ஒன்றினை நடத்தி வருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி.

இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினார் ராகுல் காந்தி என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot From Twitter @RSS91978
Screenshot from Twitter @ViswanathPrasa3

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தோனேஷிய நிலநடுக்க காட்சி என்று பரவும் தைவான் வீடியோ!

Fact Check/Verification

பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் ராகுல் காந்தி சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே மது அருந்தியதாகப் பரவுகின்ற புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ராகுல் காந்தி மதுவுடன் சிக்கன் உண்பதாகப் பரவிய புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் “Tweet of the day” என்பதாக மூத்த பத்திரிக்கையாளர் பரஞ்சோய் குஹா தாகூர்த்தா பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு இடப்பட்டிருந்தது.

அதில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மையான பதிவு இடம்பிடித்திருந்தது. ”It was sheer coincidence: travelling to Punjab this morning, I crossed the Bharat Jodo Yatra. With some difficulty and a scuffle, I was able to meet Rahul Gandhi while he was eating at a dhaba a few kms from Karnal.” என்கிற ட்வீட்டுடன் பரஞ்சோய் பதிவிட்டிருந்த இப்புகைப்படத்தில் ராகுல் காந்தி டீயுடன், முந்திரி, மக்னா, வேர்க்கடலை, பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகளையே உண்ணுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அப்புகைப்படத்தையே மார்ஃப் செய்து ராகுல் காந்தி மது மற்றும் சிக்கனுடன் அமர்ந்திருப்பதாகப் பரப்பி வருகின்றனர்.

Edited Image

Original Image

Also Read: யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் ராகுல் காந்தி சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே மது அருந்தியதாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered image

Sources
Twitter Post, From ParanjoyGuhaThakurta, Dated January 07, 2023
Website Post, From Bharatjodoyatra, Dated January 07, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular