ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம் பழங்குடியினப் பெண் கேட்ட கேள்வி என்று பரவும் புனைவு வீடியோ!

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம் பழங்குடியினப் பெண் கேட்ட கேள்வி என்று பரவும் புனைவு வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என கேள்வி கேட்ட பழங்குடியினப் பெண்.

Fact: வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.

சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அவ்வீடியோவில் பழங்குடியினப் பெண் ஒருவரிடம் தற்போதும் மக்கள் சாதி பார்த்து பழகுகின்றார்களா என ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு அப்பெண் தற்போதும் சாதி பார்க்கப்படுகின்றது என பதிலளிக்கின்றார். அதற்கு அந்நபர் நான் சாதி பார்ப்பதில்லை என கூற, உடனே அப்பெண் என் அண்ணனுக்கு உங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்வீர்களா என கேட்கிறார். தொடர்ந்து, எனக்கு திருமணம் ஆகவில்லை, என்னை நீங்கள் திருமணம் செய்வீர்களா எனவும் கேள்வி எழுப்புகின்றார்.

இவ்வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள்கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ

Twitter Link | Archived Link

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ

Archived Link

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?

Fact Check/Verification

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோவில் ‘தண்ணிவண்டி தமிழ்’ எனும் யூடியூப் பக்கத்தின் பெயர் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. 

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ

இதனையடுத்து அந்த யூடியூப் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அதில் இன்று (ஆகஸ்ட் 16) வைரலாகும் வீடியோ குறித்து விளக்கம் அளித்து, இவ்வீடியோவில் காணப்படும் நபர் வீடியோ வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அதில் வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோ என்றும், இதை சமுதாயத்தையும் இழிப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதல்ல என்றும் அவர் கூறி இருப்பதை காண முடிந்தது. மேலும் அவ்வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்கள் நடிகர்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  

தொடர்ந்து தேடுகையில் ‘சேட்டை பன்றோம்’ எனும் யூடியூப் சேனலில் கடந்த வெள்ளியன்று வைரலாகும் இவ்வீடியோவின் முழுப்பகுதி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.  

இவ்வீடியோவின் தொடக்கத்தில் அந்த சேனலில் வரும் வீடியோக்கள் யாவும் பொழுதுபோக்குகாக உருவாக்கப்பட்டது என்று  அறிவிப்பு போடப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிந்தது.

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ

தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் வீடியோவின் தொடர்ச்சியாக மேலும் சில வீடியோக்கள் இந்த யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

Also Read: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியிள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Shorts Video from Thanni Vandi Tamil
Youtube Video from Settai Panrom


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular