சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkதமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்தும் பேருந்துகள் நிலை என 2018ஆம் ஆண்டு புகைப்படத்தை பரப்பும் அதிமுகவினர்!

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்தும் பேருந்துகள் நிலை என 2018ஆம் ஆண்டு புகைப்படத்தை பரப்பும் அதிமுகவினர்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தற்காலிக ஓட்டுனர்களின் பெர்ஃபார்மென்ஸ் பயணிக்கும் பொதுமக்கள் நிலை?
Fact: வைரலாகும் புகைப்படங்களில் சில 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவையாகும்.

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்திய பேருந்துகளின் நிலை என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் பல்வேறு புகைப்படங்கள் பரவி வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் ஓட்டிய பேருந்துகள் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் சிக்கிய நிலையில் இந்த புகைப்படங்களை பலரும் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், “தற்காலிக ஓட்டுனர்களின் பெர்ஃபார்மென்ஸ் பயணிக்கும் பொதுமக்கள் நிலை?” என்று சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள்
Screenshot from X @GowriSankarD_

Archived Link

Screenshot from X @SaiAiadmk

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்திய பேருந்துகளின் நிலை என்று பரவும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரல் புகைப்படத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் முதலாவது புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜனவரி 07, 2018ல் புதியதலைமுறையில், “பேருந்தை வாய்க்காலில் இறக்கிய தற்காலிக ஓட்டுநர்” என்று வெளியாகியிருந்த செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, வைரலாகும் புகைப்படங்களின் தொகுப்பில் நான்காவது புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் கடந்த ஜனவரி 07, 2018 அன்று Hindu Tamil வெளியிட்டிருந்த செய்தியில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

“முதுகுளத்தூர் அருகே தற்காலிக ஓட்டுநர் தேர்வுக்காக நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து” என்கிற தலைப்பிலான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இரண்டாவதாக இடம்பெற்றிருந்த நியூஸ்கார்ட் மற்றும் அதிலிருக்கும் செய்தி மட்டுமே தற்போது நடைபெற்றது என்பதை அறிய முடிந்தது. மூன்றாவதாக இடம்பெற்றிருக்கும் புகைப்படம் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்திய பேருந்துகளின் நிலை என்று பரவும் புகைப்படங்களில் சில 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டவை என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from Puthiyathalaimurai, Dated January 07, 2018
Report From Hindu Tamil, Dated January 07, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular